திங்கள், 16 நவம்பர், 2009

இந்தியர்களிடம் இருந்து விலகி இருப்பது தான் தமிழருக்கு நல்லது

தங்களை இந்தியன் என்று கூறிகொள்ளும் தமிழ் பேசும் மக்களிடம் இருந்து விலகி இருப்பது தான் தமிழர்களுக்கு நல்லது. ஏன் என்றால் இந்திய தேசியத்தை ஏற்கும் எவனாலும் தமிழ் இன விடுதலையை ஆதரிக்க முடியாது .இந்தியாவில் மொத்தம் ௧௬00 [1600]றிற்கு மேற்பட்ட மொழிகள் இருக்கின்றன . ஆனாலும் ஆண்டுதோறும் ௨00[200] கோடி செலவு செய்து இன்னும் வெறும் ௪0 [40] விழுக்காட்டு மக்களே பேசும் ஒரு மொழியாக இருக்கிற இந்தி மொழி தான் இந்தியாவின் ஆட்சி மொழி .இதை எல்லா இந்தியர்களும் ஏற்றுகொள்கின்றனர் .ஆகையால் ஈழத்தமிழர்கள் சிங்களம் மட்டுமே சட்டத்தை ஏற்காமல் சிங்களத்தை கற்காமல் இருப்பது தமிழரின் தவறாகவே இவர்களுக்கு தோன்றும் .இந்திய அரசியல் சட்டப்படி இந்தியா ஒரு மதசார்பற்ற நாடாம்.ஆனால் அங்கு உள்ள அரசு மருத்துவமனைகளின் வாசலில் முதலில் இருப்பது வட இந்திய கடவுள் பிள்ளையாரின் கோவில் தான்.இதை போல் அரசு அலுவலங்களில் இந்து மதங்களின் கடவுள்களின் படங்களும் ,கிறித்துவ மதம் சார்ந்த படங்களும் ,இசுலாமிய மதம் சார்ந்த படங்களும் ,போதாத குறைக்கு பிள்ளை இல்லாத பெண்களுக்கு பிள்ளை தரும் சாமியார்களின் படங்களும் இருக்கும்.இதெல்லாம் அவர்களின் அரசியல் சட்டத்திற்கு எதிராக இருந்தாலும் எவானும் இதை பற்றி எல்லாம் எவனும் கேள்வி கேட்கமாட்டான். ஏன் ?முதலில் எவனும் கவலையே படமாட்டான் இந்தியாவில் நடக்கும் தீவிர ஆளர்களின் தாக்குதலுக்கு ஒவ்வொரு பாகிசுதானிக்கும் பொறுப்பு இருக்கிறது ஆகையால் பாகிசுதான் மீது போர் தொடுக்கவேண்டும் என்பர். வேறு நாட்டு தீவிர ஆளர்கள் இவர்களின் நாட்டில் தாக்குதல் நடத்தினால் அதற்கு அந்த வேற்று நாட்டின் எல்லா மக்களுக்கு பொறுப்பு இருக்கிறதாம் ,ஆனால் இவர்கள் தேர்தெடுத்த இந்தியா அரசு தமிழீழத்தில் ௧00000[100000] தமிழ் மக்களை கொன்றால் அதில் இவர்களுக்கு பங்கு இல்லையாம்,இவர்கள் நாட்டு மட்டை பந்து அணி வெற்றிபெற்றால் அது இந்தியாவின் வெற்றியாம்.ஆனால் இவர்கள் நாடு அண்டை நாட்டில் தமிழ் இன அழிப்பை நடத்தினால் அது வெறும் பேராயக்கட்சியின் தப்பு தானாம் ,இந்தியர்களின் தவறு இல்லையாம் .

இவர்கள் வெள்ளையன் தங்கள் நாட்டைவிட்டு போனதையே "Happy Independence Day " என்று கூறி தான் கொண்டாடுவர் . இவர்கள் நாட்டில் எந்த அரசு விண்ணபத்தை எடுத்து கொண்டாலும் ஒரு மனிதனின் நாடு, சாதி,மதம்,ஊர் என்ன என்றெல்லாம் கேட்டு இருப்பார்கள் .ஆனால் எங்குமே மொழியையோ இனத்தையோ கேட்டு இருக்கமாட்டார்கள் .என் என்றால் மொழி மற்றும் இனங்களை ஏற்றுகொல்லாத தேசியமே இந்திய தேசியம்.அதாவது தான் இந்த சாதி இந்த மதம் என்று கூறி கூட்டம் சேர்த்து மேலே ஏறி பின் இந்தி மக்களுடைய அடிவருடியாகவும் பார்ப்பனர்களின் அடிவருடியாகவும் மாறி கீழே இருப்பவர்களை நசுக்குவது தான் இந்திய தேசியம்.

செய் இந்து [ஜெய் ஹிந்]என்று இந்தி மொழி ஆள் இந்தியில் சொன்னால் இவன் 'வாழ்க இந்தியா' என்று தமிழில் கூற மாட்டன். இவனும் அதை இந்தியில் தான் சொல்வான் .சில ஆண்டுகளுக்கு முன் அண்ணா பல்கலைகழகத்திற்கு கீழ் இயங்கும் கல்லூரிகளில் [வட நாட்டு உடையான] சுடிதாரை தான் பெண்கள் கட்டாயம் அணியவேண்டும் என்று ஆணையிட்டனர் ,அது ஏன் என்று கேட்டால் பெண்கள் மரபு உடையில் வரவேண்டுமாம். சுடிதார் என்று தமிழச்சிகயரின் மரபு உடையானது என்பது அவர்களுக்கே வெளிச்சம் .இவர்கள் கூறும் இந்தியா, இந்திய ,அரசு இந்திய பண்பாடு எல்லாம் வட இந்தியாவில் உள்ள வெள்ளை தோல் உள்ள பார்ப்பனர்களுக்கு உரியதே ,இதை எல்லாம் பிற பார்ப்பனர்களும் வட இந்தியரும் இனப்பற்று காரணமாக வலிந்து ஏற்றுகொள்கிறார்கள் .இதை பிறர் எற்று கொண்டால் தான் அவர்கள் எல்லாம் இந்தியர் இல்லை இன்றால். சீமான் போல் சிறைக்கு போகவேண்டியது தான்

ஈழத்தமிழருக்காக வருந்துகிறேன் என்று சொல்லும் இங்குள்ள கூட்டங்கள் கூட காசுமீரின் விடுதலையையோ ,வடகிழக்கு மாநிலங்களின் விடுதலையையோ ஆதரிக்க மாட்டார்கள் ஏற்கமாட்டார்கள் .இங்குள்ளவர்கள் ,ஈழத்தமிழருக்காக வருந்துகிறேன் என்பர் ஆனால் அவர்களுக்காக இவர்களின் மூன்று நேர உணவில் ஒரு வேளை உணவில் ஒரு ஊறுகாய் குறைந்தால் கூட இவர்களால் அதை ஏற்றுக்கொள்ளமுடியாது .அவ்வளவு தான் இவர்களுக்கு ஈழத்தமிழர் மீது உள்ள அக்கறை , பற்று எல்லாம்.இவர்களுக்கு இந்தியா முழுக்க பொய் பிழைக்கவும் இவர்களுள் பெரிய செல்வந்தர்கள் இந்தியா முழுக்க சுரண்டி பிழைக்கவும் இவர்களுக்கு இந்தியா தேவை .காவிரி ,முல்லை பெரியாறு, பாலாறு போன்ற சிக்கல்களுக்கு தீர்வு இந்தியர்களிடம் இருந்து பிரிவது தான் என்று தெரிந்தாலும் அதை பற்றி பேசுபவனின் நாக்கை அறுக்க இவர்கள் தான் இந்தி மொழியினரை விட முதலில் வரிந்து கட்டிக்கொண்டு வருவர் .ஏன் என்றால் இவர்களுக்கு தகவல் தொழிநுட்ப துறை தரும் பணம் வேண்டும்,வட நாட்டு பெண்கள் வேண்டும் ,இந்தியா முழுக்க சுரண்ட வேண்டும் .

ஏற்கெனவே இந்தியன் இந்தியன் என்று கூறி திருப்பதி,திருமலை,கொள்ளேகால்,சித்தூர்,கோலார்,பாலைக்காடு ,தேவிக்குலம்,பீர்மேடு ...............போன்ற தமிழர்கள் மிகுதியாக வாழ்ந்த பகுதிகளை ௧௯௬௦ [1960 ] களில் மொழி வாரியாக மாநிலங்களை பிரிக்கும் போது ,பிற மொழியினரிடம் இழந்துவிட்டனர். இந்த வரலாறு எல்லாம் இன்று உள்ள இவர்களின் தலைமுறையினருக்கே தெரியாது.கச்சுதீவை சிங்களரிடம் இழந்துவிட்டனர், தங்கள் நீர் உரிமைகளையும் இழந்துவிட்டனர் .ஒரு இலட்சம் ஈழத் தமிழரை கொன்றுவின்ட்டனர் ,பல ஆயிரம் ஈழ தமிழ் பெண்களை கற்பழித்துவிட்டனர் , ஒரு நாள் தாங்களும் மொத்தமாக அழிய போகின்றனர்

வியாழன், 24 செப்டம்பர், 2009

நாம் என்ன செய்ய முடியும். நாம் என்ன செய்ய இயலும்.

மேலே உள்ள இரண்டு வரிகள் தான் இன்று ஞாலத்தில் உள்ள தமிழர் சிலரை பற்றி நிற்கும் சொற்றொடர்கள்.ஆம் இந்த இரண்டு சொற்றொடர்களுக்கும் பொருள் ஒன்று தானே என்று நீவிர் வினவினால் அதற்கு மறுமொழியானது தமிழ் மொழியின் படி 'ஆம்' என்று தான் இருக்கும் .ஆனால் தமிழரிடையே நிலவும் தருத்துகளின் அடிப்படையில் இவ்விரு வரிகளையும் ஆராய்ந்தால் இவற்றின் பொருள் வெவ்வேறு என்பது புலப்படும்.இதில் நாம் என்ன செய்ய இயலும் என்பது தமிழீழத்தில் ௨௦௦௯ இல் [2009] நடந்த தமிழின அழிப்பிற்குப் பின் புலம் பெயர் ஈழத் தமிழரிடையே எழுந்த சிந்தனையாகும்.இப்படி சிந்தித்து அவர்கள் விடுதலைப் போராட்டத்தின் அடுத்த கட்டத்திற்கு சென்றுவிட்டனர்.புலிகள் ஓங்கி இருந்த நேரத்தில் தாம் அரசியல் போராட்ட களத்தில் இறங்காதே இன்றைய அவல நிலைக்கு காரணம் என்பதை உணர்ந்து, பன்னாட்டு அரசியல் களத்தில் இறங்கி போராடுகின்றனர்.அவர்களின் செயல்பாடுகளை நோக்கும் போது எதிர்காலத்தில் விடுதலைப் போராட்டமானது இரு வழிகளில் ஒரே நேரத்தில் ஒரே இலக்கை நோக்கி பயணிக்கும் என்று அறிய முடிகிறது .



ஆனால் நாம் என்ன செய்ய முடியும் என்பது ஈழச் சிக்கல் பற்றி தமிழக தமிழர் கூறும் நொண்டிச் சாக்காகவோ அல்லது எழுப்பும் வினாவாகவோ இருக்கிறது .இந்த சிக்கலைப் பொருத்தமட்டும் தமிழகத்தில் பலவகை மக்கள் உண்டு.அவர்களுள் தெலுங்கர்களாக இருந்துக் கொண்டு தன்னை தமிழர் என்று அடையாளப்படுத்திக்கொண்டு நயவஞ்சகமாக தமிழரை தவறாக வழி நடத்துபவரும் ,திக்கு திருப்புபவரும் ,இந்துத்துவ இசுலாமிய கிறித்துவ மதவெறியரும் ,சாதி வெறியரும் ,மதங்களையும் சாதிகளையும் கூறி தமிழரை தம் வணிக மற்றும் அரசியல் நோக்கத்திற்காக பிளவு படுத்துபவரும் தமிழ் ஈழம் சிக்கலையும் இன்னலையும் பற்றி செப்பும் சொற்றோடரகவே 'நாம் என்ன செய்ய முடியும்' என்பது இருக்கிறது .இந்த வகையரையில் பெரிய இயக்க தலைவர்கள் முதல் சராசரி மனிதர்கள் வரை உள்ளனர் .இந்த வகையரையில் உள்ள சராசரி மனிதர்கள் தாம் தமிழின எதிர்ப்பு கொள்கைகளை தான் பின்பற்றுகிறோம் என்பதை உணராமல் இருக்கின்றனர் .ஆனால் இவர்கள் இந்த தமிழின எதிர்ப்பு கொள்கைகளை தாமாகவே வழிந்து ஏற்பதில்லை .இவர்கள் இவர்களின் தலைவர்கள் மற்றும் இவர்கள் சார்ந்த இயக்கங்களின் தவறான வழிகாட்டல்களால் இந்நிலைப்பாட்டை எடுக்கின்றனர் .இவர்களை திருத்துவது எளிதான செயல் இல்லை .ஆனால் முயன்றால் இவர்களை திருத்த இயலும் .ஆனால் இன்னொரு கும்பலொன்று உண்டு. அந்த கும்பலுக்கு உலகில் எவன் மடிந்தாலும் கவலையில்லை.அவர்களின் குடும்பத்தினர் இப்படி கொல்லப்பட்டாலோ கற்பழிக்கப்பட்டலோ கூட அவர்கள் வருந்துவரா என்று தெரியவில்லை . இந்த கும்பல் பற்றிய நல்ல செய்தி என்னவெனில் இக்கும்பல் தமிழ் உணர்வாளர்களுடன் மல்லுக்கு நிற்பத்தில்லை .தமிழர் நலனை தமிழின எதிர்ப்பு கும்பலளவிற்கு கெடுப்பதில்லை . இது போன்ற மக்கள் மட்டும் அல்லாது உண்மையாகவே ஈழத் தமிழருக்காக தாம் என்ன செய்ய முடியும் என்று தெரியாது இக்கேள்வியை கேட்கும் சில இளைஞர்களும் இளம்பெண்களும் இருக்கின்றனர் . இவர்களை வழிநடத்துவதும் இவர்களுக்கு சிந்தனைத் தெளிவை ஏற்படுத்துவதும்



இவர்கள் போலி நாட்டு இயத்தால் [தேசியத்தால்] பீடிக்கப்பட்டு இருப்பின் அதன் பிடியிலிருந்து இவர்களை வெளிக்கொனர்வதும் தமிழின உணர்வாளர்கள் செய்யவேண்டிய தலையாயக் கடைமையாகும்.முதலில் இவர்களுக்கு ஈழம் பற்றிய வரலாற்றையும் தமிழரின் போராட்ட வரலாற்றையும் தமிழ் ஈழத்தின் தேவைக்கான காரணத்தையும் ,தன்முடிவு உரிமையை பற்றியும் [Right to Self-Determination] கற்பிக்கவேண்டும் .ஏனெனின் ,ஏன் போராடுகிறோம் என்று தெரியாமல் போராடுபவனால் சரிவர போராடவோ போராட்டத்தில் உறுதியுடன் இருக்கவோ வெல்லவோ இயலாது .மேலும் இவர்கள் தம்மை ஒத்த தமிழர்களிடமோ வேற்றுவர்களிடமோ தமிழ் ஈழம் பற்றிய உரையாடலில் ஈடுபடும் போது "நீ தமிழன் என்பதால் தான் அந்த விடுதலைப்புலிகள் என்ற கொடூரர்களுக்குக்காக பரிந்து பேசுகிறாய்' என்ற ஒற்றை சொற்றொடரில் இவர்களை மற்றவர்கள் தோற்கடித்துவிடுவர். இவர்களுக்கு இவற்றை எல்லாம் கற்பிக்காவிட்டால் இந்த தமிழீழச் சிக்கலில் முழு ஈடுபாடு இருக்காது.



இவர்களை முதில் தமிழரின் வரலாற்றையும் இந்தச் சிக்கல் பற்றியும் அதன் வரலாறு பற்றியும் தமிழரின் போராட்ட வரலாறு பற்றியும் கற்பிக்கவேண்டும் .தமிழர்கள் முப்பது ஆண்டுகள் அறவழியில் போராடி பலன் கிட்டததாலும் ,௧௯௫௬[1956] ,௧௯௮௧[1981] ஆகிய ஆண்டுகளில் தமிழருக்கு எதிராக நடந்த வன்கொடுமைகள் மற்றும் யாழ்ப்பாண நூலக எரிப்பு போன்ற நிகழ்வுகளாலும் தான் அவர்கள் வேறு வழியின்றி போர் கருவிகளை கையில் எடுத்தனர் என்ற உண்மையை எடுத்துரைக்கவேண்டும்.மேலும் ௧௯௮௩ [1983] இல் தமிழருக்கு எதிராக நிகழ்த்த வன்கொடுமைகள் காரணமாக கொழும்பில் மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டதாலும்,பல தமிழச்சியர் கற்பழிக்கப்ட்டமையாலும் ,அவர்களின் உடமைகுளும் இல்களும் சுரையாடி அழிக்கப்பட்டமையாலும் அதன் காரணமாக இலட்சக்கணக்கான தமிழர்கள் நாட்டைவிட்டு வெளியெரியமையாலும் இவற்றையெல்லாம் சிங்கள போக்கிலிகளும் காவல் துறையினரும் சிங்கள் அரசிடம் இருந்து தமிழரையும் அவரது இல்லங்களையும் கடைகளையும் கண்டறிவதற்காக சிங்கள அரசிடம் இருந்து பெற்ற கொழும்பு நகர வாக்காளர் பட்டியலை கொண்டு செய்தமையாலும் எல்லாவற்றிக்கும் மேலாக இதை பார்த்து உலகநாடுகள் மௌனமாக இருந்தமையாலும் தமிழர் போர்கருவிகளை தவிர வேறு எதையும் நம்ப இயலாத சூழலுக்கு தள்ளப்பட்டனர் என்பதை எடுத்துரைக்க வேண்டும்



மேலும் புலிகளுக்கு துவக்கத்தில் இந்தியா தன்னல நோக்கத்துடன் உதவியதையும் புலிகள் தம் கைப்பாவையாக செயல்படமாட்டார் என்றுணர்ந்தபின் அவர்களிடம் இருந்து போர் கருவிகளை அமைதி படை ஊடாக பெற்றுக்கொண்டு இருந்த அதே வேளையில் மற்ற போராட்டகுழுக்களை தம் கைப்பாவையாக முயற்சித்ததை எடுத்துகூரவேண்டும்.அமைதி படை காலத்தில் திலீபன் இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் இந்தியா கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டி பல நாட்கள் நீர்கூட அருந்தாமல் அறவிழியில் உண்ணாநோன்பு இருந்து உயிர் நீத்த கதையை மிக தெளிவாக எடுத்து கூற வேண்டும் .



மலையக தமிழரின் வாழ்வுரிமையை காக்காதது முதல் அண்மையில் போர் என்ற பெயரில் இன அழிப்பு முடிந்த பின் கூடிய, ஐக்கிய நாடுகளின் மனித உரிமை அவையில், இலங்கை மீது போர் குற்ற மற்றும் மனித உரிமைகள் மீறலுக்கான ஆய்வை ஐநா நடத்தக் கூடாது என்று இந்தியா வாக்களித்தது வரை இந்தியாவின் தமிழின எதிர்ப்பு கொள்கைகளை இளைஞர்களுக்கு எடுத்துகூறி அவர்களை அறவழியில் ஈழ விடுதலைக்கான போராட்டத்தில் ஈடுபட செய்யவேண்டும் .இதன் ஊடாகவே தமிழக தமிழர் ஈழத் தமிழருக்கும் தமக்கும் உதவ இயலும் .


-