வியாழன், 14 ஜனவரி, 2010

சித்திரை க[1] தமிழ் புத்தாண்டா?

பொங்கலை தமிழ் புத்தாண்டாக அரசு அறிவித்து 2 ஆண்டுகள் ஆகிவிட்டன.தமிழ் நாட்டு கருணா செய்த ஒரே நல்ல செயல் இது தான்.

சித்திரை க [1 ] வைணவ புத்தாண்டு ஆகும்.
ஒரு நாள் நாரதன் தனக்கு மனைவியே இல்லை என்று வருத்தமாக பெருமாளிடம் கூறினானாம்.அதற்கு பெருமாள் பெண் உருவம் பூண்டு நாரதனுடன் 600 ஆண்டுகள் புணர்ந்து,60 குட்டிகளை போட்டானாம்.அந்த அறுபது குட்டிகளுக்கும் 60 வடமொழி பெயர்கள்

அந்த வடமொழி பெயர்களை ஆரிய பார்ப்பனர்கள் ஆண்டுகளுக்கு வைத்து அவற்றை தமிழ் ஆண்டுகள் என்கிறனர்.அந்த ஆண்டுகளை வரலாற்றை பதிவு செய்ய பயன்படுத்த முடியாது.ஏன் என்றால் 60 ஆண்டுகள் கழித்து முன்பு வந்த ஆண்டே மீண்டும் வரும்.ஆகையால் எந்தனையாவது பார்த்திப ஆண்டிலோ ,விரோதி ஆண்டிலோ ஒரு நிகழ் நிகழ்ந்தது என்று பழைய ஆவணங்களை பார்த்து கூற இயலாது. மேலும் பண்டைய தமிழர்கள் சைவம்,வைணவம் ,சமணம்,பௌத்தம் என்று பல சமயங்களை பின்பற்றினர்.ஆகையால் அந்த காலத்தில் மற்ற சமயத்தினர் எப்படி இந்த வைணவ புத்தாண்டை கொண்டாடி இருப்பர்?


தமிழ் அறிஞசர்கள் சங்க இலக்கியங்களை ஆராய்ச்சி செய்து ௫௦௦ [௫00] தமிழ் அறிஞசர்காள் சுறவம் [தை] க [1] தான் தமிழ் புத்தாண்டு என்ற உண்மையை வெளிகொண்டுவந்தனர்.ஆகையால் பொங்கலை தமிழ் புத்தாண்டாக தமிழ் நாட்டு அரசு அறிவித்து திருவள்ளுவரின் திருக்குறள் பொது அவைக்கு வந்த நாளை அடிப்படையாக கொண்ட தொடர் ஆண்டுகளை உடைய ஒரு நாள் காட்டியை தமிழ் நாட்டு அரசு ஏற்று இருக்கிறது.பொங்கலை தமிழ் புத்தாண்டாக அறிவித்து இருக்கிறது.இப்போது நாம் தமிழ் ஆண்டு ௨0௪௧ [2041] இல் இருக்கிறோம்.இப்போது அரசு ஆண்டு கணக்கை மாற்றி அமைத்தும் உண்மையான தமிழ் புத்தாண்டான பொங்கலை, தமிழ் புத்தாண்டாக மீட்டெடுத்தும் உள்ளது.ஆனாலும் இன்னும் சித்திரை,வைகாசி,புரட்டாசி போன்ற திங்கள்கள்[ மாதங்கள்] வடமொழியில் தான் இருக்கின்றன.அரசு இதை தடை செய்து விட்டு உண்மையான தமிழ் திங்கள்களான சுறவம் ..போன்றவற்றை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும்.

சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம்
உழுந்தும் உழவே தலை

என்றோ சொல்லி வைத்தான் எங்கள் வள்ளுவன் உலகம் உருண்டை என்று! வாழ்க நின் புகழ்!

2 கருத்துகள்: